பெண்மையைப் போற்றுவோம் 039

புதுமைப்பெண் விருது கட்டுரைப் போட்டி

பெண்மையைப் போற்றுவோம் 039

புதுமைப்பெண் பெண்மையை  போற்றுவோம் 

 முன்னுரை

 பெண் என்பவள் மதிப்பு மிக்கவள் ஆற்றலும் அறிவும் பெற்றவள் அவர்கள், இந்த பூ உலகின் ஒளி அவர்கள் மூலமாகவே இச்சமுதாயத்தின் இருள் என்னும் அறியாமை அகற்றப்பட வேண்டும் என்பதாலேயே கடவுள் தனக்கு அடுத்தபடியாக இந்த உலகினை மீட்டெடுக்க அற்புதமும் வல்லமையும் கொண்ட பெண்களைப் படைத்து விட்டாரோ என்னவோ மனவலிமை கொண்ட பெண்களுக்காக உரக்க குரல் கொடுத்தவர் பாரதி.  அன்று அவர் கொடுத்த குரல் மாற்றத்திற்கான விதையாகும் அவரின் குரல் இன்றைய பெண்களின் வாழ்க்கை முறை மாற வழிவகை செய்தது இன்றைய புதுமை பெண்கள் தடம் பதிக்கவும் தன்மானம் பெறவும் வழிவகை செய்தவர் பாரதியாவார் .

பொருளுரை:- பெண்ணின் பெருமை பெண் என்பவள் உருவாக்குபவள் ஆண் நாடோடியாய் அலைந்து திரிந்த போது பெண் விதை இட்டு தானியங்களை விளைவித்து வாழ முடியும் என ஆணுக்கு தன்னம்பிக்கை தந்து அறிவுறுத்தினாள். ஆடு மாடுகளை வளர்த்து பால் பெருக்கி வறுமைக்கு எதிராக போர் தொடுத்தாள் அவளது மன வலிமைக்கு சான்றாக சரித்திரம் பல கதைகள் சொல்லும் முடியாது, என்ற சொல்லை முடித்துக் காட்டுவாள் நம் தமிழ் சமூகம் என்பது பெண்வழிச் சமூகம் ஆகும் பெண் வழி வந்ததால் தான் நம் சமூகம் நீடிய பெருமையும் பாரம்பரியத்தையும் பெற்றது.

சங்ககாலத்திலேயே பெண் புலவர்களில் பெருமை பெற்றோர் 32 பேர் அப்படியானால் இக்காலத்தில் பெண்களின் முன்னேற்றம் என்பது சாத்தியமே, இக்கால புதுமை பெண்கள் கல்வியில் சாதனை புரிந்து குழந்தை திருமணத்தை ஒழித்து ஆண் பெண் வேறுபாட்டை நீக்கி உயர்ந்த பதவிகளை கைப்பற்றி பொருளாதாரத்தில் மேம்பட்டு பிடித்த வாழ்க்கை பிடித்த துணை நடு இரவில் தனிப் பயணம் என நம் கவனம் ஈர்த்தனர். தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக கையாண்டார்கள் காக்கை பாடினியார் தொடங்கி ஜெயலலிதா வரை வியந்து பார்த்த சாதாரண பெண்கள் கூட, இன்று சாதனை புரிய முடியும் என நிரூபித்துக் காட்டினர் சாதனை செய்ய அறிவியலும் துணை புரிய சாதனை பட்டியலில் பெண்களின் பெயர்களும் நீண்டு கொண்டே தான் இருக்கிறது ஆண் இவ்வுலகில் துவண்டு போகும்  நேரத்தில் அவனை ஆசுவாசப்படுத்தி உத்வேகம் தந்து ஜெயிக்க வைப்பவள் பெண் எத்தனையோ குடும்பங்கள் இன்றளவும் இணைந்து வாழ மூளையாக செயல்படுபவள் பெண் உற்ற நேரத்தில் குடும்ப பாரத்தை தாங்கிக் கொள்ளவும் உறவுகளுக்கு தோல் தந்து நெறியோடு வாழ்க்கை நடத்துவதும் பெண் இன்றைய புதுமைப் பெண்கள் தேங்கி நிற்கும் சாக்கடை  அல்ல அடித்துச் செல்லும் காட்டாறு, ஆற்றில் தேடினால் தங்களுக்கு தேவையான ஏதோ ஒன்று அங்கு இருக்கும் பெண்களை இழிவு படுத்துதல் பெண் என்பவள் திடமானவள் அவளை ஜடமாக்காதீர்கள் அவளை அடக்கி ஒடுக்கி அவமானப்படுத்தி போக பொருளாய் மாற்றி கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை சொல்ல முடியாத துயருக்கு ஆளாக்கி   அவளது திறமை அறிவு ஆற்றலை கணக்கில் கொள்ளாமல் வயது அழகு தோற்றம் என உடலை மையப்படுத்தி அவளது எதிர்கால கனவை சிதைத்து அவள் உள்ள வேதனையில் அவள் மேல் பெட்ரோலையும் ஆசிட்டையும் ஊற்றும் மிருக ஜென்மங்களை அடக்குவது எப்போது? மொட்டிலேயே பிஞ்சுகளை கருக்கி பெண்களை போதைக்கும் பாலியல் கொடுமைக்கும் ஆளாக்கி நாகரீகம் என்ற பெயரில் நாசம் செய்து பெண்ணை வாழ விடாமல் செய்வது ஏன் பெண்கள் எத்தகைய உயர்நிலை அடைந்தாலும் கூட இன்றைய சூழலில் குடும்ப வன்முறைக்கு ஆளாகி படுகுழியில் தள்ளப்படுகிறாள் இதனை குடும்ப உறுப்பினர்கள் உணர்ந்து தெளிந்தாலே பெண்கள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். பெண்களின் வளர்ச்சியும் சுலபமாகிவிடும் பெண்ணுக்கான உரிமை என்பது நம் அரசியல் சட்டத்தில் நிறைய உள்ளது பெண் உரிமைக்காக நாம் எவரிடத்தும் கையேந்தவும் போராடவும் அவசியம் இல்லை அதேபோல் பெண்கள் தினத்தை கொண்டாட வேண்டியவர்கள் ஆண்களே!

பூவாய் காற்றாய் தென்றலாய் மழையாய் கவிதையாய் வாழ்ந்தது போதும் பெண்ணாய் வாழ்வோம் நாம் வாழ்ந்தால் மட்டும் போதாது கோடிக்கணக்கான மகளிர் அடிப்படை உரிமை கூட இல்லாமலும் தெரியாமலும் வாழ்ந்து வருகின்றனர் சாதித்த சாதிக்க துடிக்கும் நாம் இப்படிப்பட்டவர்களுக்கு தயவு காட்டினால் வீடும் நாடும் நலம் பெறும். முடிவுரை நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை திமிர்ந்த ஞான செருக்கோடும்  ஓங்கிய நம் குரல் எல்லோருக்கானதாகவும் மாற்றத்தை தருவதாகவும் அமையட்டும் பெண்களின் உயர்வு நாட்டின் உயர்வு ஆகும். வெற்றியின் மைல் கல் அருகிலேயே வீழ்வது பெண்ணுக்கு எதிரான செயல்கள் தான் வெல்வது பெண்மையே பெண்மையை போற்றுவோம்.... பேணிக்காப்போம் பெண்கள் எனும் பேரின சமுதாயத்தை. வா தோழி வா சரித்திரம் எழுத வேண்டும் புதுமைப் பெண்ணே விரைந்து வா!

நன்றி வணக்கம் அனைவருக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

- A. கோமதி  7A இந்திரா காந்தி தெரு கக்கன் காலனி கே.கே. நகர் திருச்சி 620021